ஏப்ரல் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!

1
ஏப்ரல் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு உத்தரவு!!
ஏப்ரல் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு உத்தரவு!!
ஏப்ரல் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!

கொரோனா நோய்த்தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தில் வருகிற சனிக்கிழமை (ஏப்ரல் 24) முதல் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

வார இறுதி ஊரடங்கு:

நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. சமீப காலமாக கொரோனா 2வது அலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் ஒன்றாக இரவு நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போது உத்திர பிரதச மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 24ம் தேதி முதல் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. வார இறுதி ஊரடங்கு வெள்ளிக்கிழமை இரவு 8 மணிமுதல் திங்கட்கிழமை காலை 7 மணிவரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மே 1ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசு உத்தரவு!!

இந்த நேரங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். ஏற்கனவே அம்மாநிலத்தில் அலகாபாத், லக்னோ, வாரணாசி, கான்பூர், நகர் மற்றும் கோரக்பூர் ஆகிய 5 நகரங்களில் ஏப்ரல் 26ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. நம் உடலிலிருந்து வருகிற மூச்சுகாற்றே இன்னோருவருக்கு பரவக்கூடாதென்று மூக்குக் கவசம் கட்டச் சொல்கிற இந்த புத்திசாலி அரசாங்கம் பொதுமக்கள் நடமாடும் இடத்தில்.டீ. | தேனீர் கடைகலிள் அப்படி புகைப்பிடிப்பதற்கு அனுமதி அளித்தது. இந்த முட்டால் அரசு. முதலில் டீ கடை கலையும். புகைப்பிடிப்பதையும், பீடா. பான்.ற்றிலையைன்று சாலையில் உமிழ்வதை தடைசெய்யே வேண்டும். பிறகு பார்ப்போம். நோய்தொற்று எவ்வளவு பரவுகிறதென்று. அதேபோல வீட்டிற்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க அரசு முன்வரவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!