1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 11 வரை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வரை மூடப்பட உள்ளதாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 80,000க்கு மேல் கடந்துள்ளது. அதில் அதிகப்படியான மக்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகம், கேரளா, ஹரியானா, மத்தியபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏற்கனவே 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் மூடப்பட்டன.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜாக்டோ ஜியோ வெளியீடு!!
தற்போது அதற்கான கால அவகாசம் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு செல்லலாம் என கூறப்பட்டு உள்ளது.