பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை – மாநில அரசு உத்தரவு!!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் போன்ற அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் மார்ச் 31ம் தேதி விடுமுறை அளிப்பதாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று:
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டது. பள்ளி, கல்லூரி போன்ற அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் மற்றும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வந்தது.
‘கற்போம் எழுதுவோம்’ தேர்வுகள் – மே 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!
இரண்டாம் அலை:
பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படுவதற்கு அரசுகள் நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்து அதனை கடைபிடிக்க உத்தரவிட்டது. பள்ளிகளும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைளை முறையாக கடைபிடித்தனர். இருப்பினும் இந்தியாவில் மீண்டும் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது.
பள்ளிகள் விடுமுறை:
பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது வரை 3,306 நபர்கள் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
கொரோனா மிகவும் வேகமாக பரவி வருவதால் உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் மார்ச் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்