கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி மறுப்பு – அமெரிக்க அரசு அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளின் பயன்பாட்டில் முக்கியமானதாக கருதப்படும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளை உபயோகிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா அவசர கால பயன்பாட்டில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் உபயோகத்தில் உள்ளது. அந்த வகையில் கோவாக்சின் மருந்தை பாரத் பயோடெக் நிறுவனமும், கோவிஷீல்டு தடுப்பு மருந்தை சீரம் நிறுவனமும் தயாரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக செயல்பட கூடிய அளவுக்கு திறன் மிக்கதாக கருதப்படும் இந்த மருந்துகள், இந்தியாவில் பல கட்ட பரிசோதனைக்கு பின்பு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் ஜூன் 14 முதல் மாணவர் சேர்க்கை மீண்டும் தொடக்கம் – அரசு அறிவிப்பு!!
இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பு மருந்துகளை அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது கோவாக்சின் மருந்து தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக்கிடம், அமெரிக்காவின் ஒப்பந்ததாரரான ஓகுஜென் நிறுவனம் சார்பில், அமெரிக்காவில் கொரோனா அவசரகால பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கோரப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் ஓகுஜென் நிறுவனம் அளித்துள்ள கோரிக்கையை நிராகரித்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, கோவாக்சின் மருந்துகளை பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை. மேலும் கோவாக்சின் மருந்துகளை உபயோகிக்க, கூடுதல் மருத்துவ பரிசோதனைகளின் முடிவை சமர்ப்பிக்க அந்நிறுவனத்துக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.