H1B விசாவிற்கு செக் வைக்கும் அமெரிக்க அரசு – ஐடி நிறுவனங்கள் பாதிப்பு!
அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் அயல்நாட்டு ஊழியர்களை பணியில் நியமனம் செய்து வருவதால், ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க தற்போது அமெரிக்க அரசு புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்க அரசின் முடிவு:
அமெரிக்காவில் சென்று பணியாற்ற வேண்டும் என்பது தான் படித்த இளைஞர்கள் பலரின் கனவாக உள்ளது. அமெரிக்க வேலைவாய்ப்பு மோகத்தால், பலரும் அமெரிக்கா விசாவிற்காக பல மாதங்கள் காத்திருக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும், மிகவும் அதிக அளவிலான மக்கள் வேலைவாய்ப்புகளுக்காக அமெரிக்காவை நோக்கி படை எடுப்பதால், இதன் எண்ணிக்கை மற்றும் செயல்பாடுகளை முறைப்படுத்த அமெரிக்கா அரசு தற்போது ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜன.07) வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் உள்ளே!!
Follow our Instagram for more Latest Updates
அதாவது, அமெரிக்கா வேலைவாய்ப்புகளுக்கான H-1B விசாவின் கட்டணத்தை பலமடங்கு உயர்த்த முடிவு செய்து, அதன்படி, 10 டாலர் ஆக உள்ள H-1B விசா பன் மடங்கு அதிகரித்து 215 டாலராக உள்ளது. இதேபோல், EB-5 investor Petition விண்ணப்பம் தற்போது 3,675 டாலர் ஆக உள்ள நிலையில், 204 சதவீதம் உயர்த்தி 11,160 டாலர் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் விதிமுறைகளின் படி வேலைக்காக வரும் வெளிநாட்டு ஊழியர்களின் விசாவை நிறுவனம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். தற்போது இந்த அதிக பட்ச கட்டண உயர்வினால் அதிக வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்கும் ஐடி நிறுவனங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.