இந்தியாவை தாக்கும் அமெரிக்க டாலர் மதிப்பு? தீபாவளிக்கு பிறகு உயரவுள்ள மொபைல் போன்களின் விலை!

0
இந்தியாவை தாக்கும் அமெரிக்க டாலர் மதிப்பு? தீபாவளிக்கு பிறகு உயரவுள்ள மொபைல் போன்களின் விலை!
இந்தியாவை தாக்கும் அமெரிக்க டாலர் மதிப்பு? தீபாவளிக்கு பிறகு உயரவுள்ள மொபைல் போன்களின் விலை!

இந்தியாவின் பொருளாதார நிலை தற்போது சரிவை சந்தித்து வருவதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளது. அதில் ஒரு படியாக, மொபைல் போன்களின் விலை அதிரடியாக உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மொபைல் போன் விலை:

உலகம் முழுவதும் அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து தான் பொருளாதார நிலை நிர்ணயிக்கப் படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் அனைவரும் அமெரிக்க டாலரின் மதிப்பை உற்று நோக்கி வருவது வழக்கம். சமீபத்தில் கூட நாட்டின் மாநிலங்களவை கூட்டத்தொடரின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய பொருளாதார நிலையை பற்றி பேசியுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

அப்போது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்திய ரூபாயின் மத்தியில் மதிப்பு குறைந்ததாக தான் பார்க்கவில்லை என்றும், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவே தான் கருதுவதாகவும் கூறியிருந்தார். தற்போதைய இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் நாட்டில் புதியவர்களை பணியமர்த்தும் திட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் வேலையிழக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் நியூயார்க்கில் தீபாவளிக்கு பொதுவிடுமுறை – மேயர் அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதால் இந்தியாவில் பல விளைவுகள் ஏற்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகைக்கு பிறகு இந்திய வணிக சந்தையில் மொபைல் போன்களின் விலை கிட்டத்தட்ட 5% முதல் 7% வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே உங்களுக்கு மொபைல் போன் வாங்க ஏதேனும் பிளான் இருந்தால் அதை தீபாவளி பண்டிகைக்கு முன்னறே நிறைவேற்றி கொள்ளுங்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!