தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை – அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டு வரும் விண்ணப்பங்கள் அரசால் வெளியிடப்பட்டவையா என்று விளக்கம் அளிக்குமாறு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
உரிமைத் தொகை
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையின் போது அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்த திமுக அரசு அதனை செயல்படுத்துவதற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்காக முதல்வர் முக ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய சில விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பிப்.16ல் தேர்வு முடிவுகள் வெளியீடு!
இந்த விண்ணப்பங்கள் உண்மையானவையா என்று அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘திமுக கட்சியின் தலைமையிலான தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்திருந்தாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இதுவரை வெளியிடவில்லை.
அதே போல உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள், விண்ணப்ப விவரங்கள் எதுவும் அரசு சார்பில் கொடுக்கப்படவில்லை. ஆனால் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது உண்மையான விண்ணப்ப படிவமா என்று தெரியவில்லை.
சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இதனால் அரசு பெயரில் விநியோகிக்கப்பட்டு வரும் விண்ணப்பங்கள், ஏதேனும் மோசடி அல்லது முறைகேடு தொடர்பானதாக இருக்கலாமா என்று சந்தேகிக்கப்படுகிறது. இப்போது குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விண்ணப்பம் அரசால் விநியோகம் செய்யப்படுகிறதா அல்லது அது போலியானதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை இது மோசடியாக இருப்பின் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.