‘கண்டிப்பாக சித்ராவை ஹேம்நாத் தான் கொலை செய்திருக்க வேண்டும்’ – ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சித்ரா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது மட்டும் தெரியவே இல்லை. தற்போது ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
சித்ராவின் மரணம்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாகத் தான் சித்ரா திரையுலகில் அறிமுகமானார். சித்ரா சினி துறையில் இருப்பதால் இவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். சமூக வலை பக்கங்களிலும் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வந்தார். சீரியலில் அறிமுகமாகி சில மாதங்களிலேயே எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இதற்கு பின்பு, திடீரென ஹேம்நாத் என்பவரை காதலிப்பதாக சமூக வலை பக்கங்கள் வாயிலாக அனைவருக்கும் தெரியப்படுத்தினார். இதற்கு பிறகு ஹேம்நாத்தை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
Exams Daily Mobile App Download
நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பின்னரும் கூட வழக்கம் போல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா நடித்து வந்தார். பின்பு, திடீரென சித்ரா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. ஹேம்நாத் தான் சித்ராவை சந்தேகப்பட்டு திட்டியதாகவும் இதனால் மன அழுத்தத்தில் இருந்த சித்ரா தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்க வேண்டும் என கூறப்பட்டது. இதனால் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு, ஜாமினில் வெளியே வந்தார்.
சித்ரா தற்கொலை செய்துகொண்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. தற்போது சித்ராவின் மரணத்தில் ஒளிந்துள்ள மர்மங்கள் அனைத்தும் வெளியாகி வருகிறது. அதாவது, ஹேம்நாத்திற்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. சித்ரா இறந்த போது கூட அந்த துக்கம் ஹேம்நாத்தின் முகத்தில் தெரியவே இல்லை. அவ்வளவு ஜாலியாக சுற்றி கொண்டிருந்தார். எப்படியும் ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருக்க வேண்டும் என சித்ராவிற்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் என அனைவரும் கூறிவருகிறார்கள்.