மாதம் ரூ.10 ஆயிரம் வரை பென்சன் – LIC நிறுவனத்தின் வாழ்நாள் ஜீவன் சாந்தி பாலிசி!
இந்தியாவின் முன்னணி நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனமான LIC, அதன் வாடிக்கையாளர்கள் வாழ்நாள் முழுவதும் பெற்றுக்கொள்ளும் வகையில் சிறந்ததொரு ஜீவன் சாந்தி பாலிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்கள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் திட்டம்
தற்பொழுதுள்ள இளைய தலைமுறையிடம், தங்களது எதிர்கால வாழ்க்கைக்காக தேவைப்படும் நிதியை சேமித்து வைக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் வருங்காலத்துக்காக பணம் சேமித்து வைக்க விரும்புபவர்களுக்கு வங்கி, காப்பீட்டு நிறுவனங்களும் சிறந்ததொரு வாய்ப்பை வழங்குகிறது. அந்த வரிசையில் LIC நிறுவனம், சில ஆயுள் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது LIC வழங்கும் பென்ஷன் திட்டத்தில் மிக சிறந்ததொரு திட்டமாக ஜீவன் சாந்தி பாலிசி கருதப்படுகிறது.
Infosys நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – WFH முடிகிறதா?
இதன் சிறப்பம்சத்தை உற்று கவனித்தால், வாடிக்கையாளர்கள் ஒரு பிரீமியம் செலுத்தினால், ஒவ்வொரு மாதமும் அதாவது அவரது வாழ்நாள் முழுவதும் ரூ.10,000 ரூபாய் வரை பென்சன் பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் பயனர்களின் விருப்பத்திற்கேற்ற 5, 10, 15, 20 போன்ற ஆண்டுகளில் பென்சன் வாங்கும் வசதியும் இதில் உள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கத்தக்கது என்னவென்றால், பயனர்கள் பென்சன் வாங்கத் துவங்கிய ஒரு வருடத்திலேயே கடன் வசதியும் கொடுக்கபடுகிறது. இது தவிர பென்சன் வாங்க துவங்கிய மூன்று மாதங்களுக்கு பிறகு பாலிசியை சரண்டர் செய்யவும் முடியும்.
TN Job “FB Group” Join Now
இந்த பாலிசியின் கீழ் நன்மையடைய விரும்பும் நபர், 30 வயது பூர்த்தியானவராகவும் அதிகபட்சமாக 85 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். இதில் 37 வயது நிரம்பிய ஒருவர் பாலிசியை பெற்றுக்கொள்ள, ஒற்றை பிரீமியம் தொகையாக ரூ.20,36,000 செலுத்த வேண்டும். இதன் மூலம் அவருக்கு மாதந்தோறும் ரூ.10,067 பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை மூன்று மாதங்களுக்கு, ஆறு மாதங்களுக்கு, ஒரு வருடத்துக்கு ஒரு முறையாக பெற்றுக்கொள்ளலாம். இத்தொகை பாலிசிதாரரின் மரணம் வரை கொடுக்கப்படும். இது தவிர LIC நிறுவனம், ஒரே பிரீமியம் தொகை செலுத்தி மாதம் ரூ.14,000 வரை பெறும் பென்சன் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.