PF தொகையில் இருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம் – EPFO அறிவிப்பு!
இந்தியாவில் PF தொகையிலிருந்து ஈபிஎஃப்ஓ நடைமுறையின் படி மருத்துவ உதவிக்காக எந்த ஆவணமும் இல்லாமல் 1 லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
பிஎப் தொகை:
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்யப்படுகிறது. இதனுடன் நிறுவனங்கள் கூடுதலாக தொகையை வரவு வைத்து வருகிறது. இந்த தொகை அவர்கள் ஓய்வு பெறும் பொது ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. பணி காலம் நிறைவு பெறுவதற்கு முன்பு பிஎப் தொகையை பெற வேண்டும் என்றால் விதிமுறைகளின் படி ஊழியர்கள் தேவைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு இல்லை – வெளியான தகவல்!
ஆனால் தற்போது ஈபிஎஃப்ஓ ஒரு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. PF தொகையிலிருந்து எந்த ஆவணமும் இல்லாமல் 1 லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம் என ஈபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. இது அவசர மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே எனவும் தெரிவித்துள்ளது. மருத்துவமனை மற்றும் நோயாளியின் விவரங்களுடன் பணியாளர் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை கடிதம் அளித்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவ செலவிற்கான முன் பணத்தை பிஎப் தொகையிலிருந்து எடுக்கலாம் என ஈபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் மருத்துவ உதவித்தொகை 1 லட்சத்திற்கு மேல் செல்லும் போது விதிமுறைக்கு உட்பட்டு ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியமாகும். இவ்வாறு மருத்துவ தேவைக்காக PF பணத்தில் முன்கூட்டியே கொடுக்கப்படும் தொகை, ஊழியர் சம்பள கணக்கில் வரவு வைக்கப்படும் அல்லது நேரடியாக சிகிக்சை பெறும் மருத்துவமனையில் செலுத்தப்படும். அதன் பிறகு, பணியாளர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 45 நாட்களுக்குள் மருத்துவ சிகிச்சை செய்ததற்கான உரிய ரசீதுகளை சமர்ப்பிக்க வேண்டும் என ஈபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.