தமிழகத்தில் Ph.D பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – ரூ.1,00,000 வரை கல்வி உதவித்தொகை!

0
தமிழகத்தில் Ph.D பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு - ரூ.1,00,000 வரை கல்வி உதவித்தொகை!
தமிழகத்தில் Ph.D பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு - ரூ.1,00,000 வரை கல்வி உதவித்தொகை!
தமிழகத்தில் Ph.D பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – ரூ.1,00,000 வரை கல்வி உதவித்தொகை!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வியை மேம்படுத்த அவர்களுக்கு தமிழக அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது முழு நேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்டவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்க உள்ளதாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம்.

கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் இதில் பெரும்பாலானோர் தங்களின் கல்வியை விட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக வேலைக்கு சென்றனர். அதனால் மாணவர்கள் தங்கள் கல்வி படிப்பின் இடைநிற்றலை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது மாணவர்களுக்கு தமிழக அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவியர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெறாதோர் கவனத்திற்கு – மீண்டும் ஒரு வாய்ப்பு!

இதையடுத்து தமிழகத்தில் கிராமப்புறங்களில் படித்து கொண்டிருக்கும் 3 முதல் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் 6ம் வகுப்பு மாணவியருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது முழு நேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் தமிழகத்தை சார்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் உள்ளிட்டவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,00,000 வரை வழங்கப்படும் என்று அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தற்போது இத்திட்டத்தில் இணைவதற்கான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் பெறுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அத்துடன் இதில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பகுதி நேர முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இது வழங்கப்படமாட்டாது. அத்துடன் முதுகலை பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை – 600005 என்ற முகவரிக்கு வருகிற ஜூன் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை  பெற https://drive.google.com/file/d/1crrX45s7YQ90xTT6sCuc-MP-ra3P72G6/view என்றலிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!