UPSC ஐஏஎஸ், ஐஎப்எஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – ஜூன் 5ம் தேதி நடத்தப்படும்!
இந்தியாவில் UPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 5ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
UPSC தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா பேரிடரில் இருந்து மக்கள் மீண்டும் வரும் நிலையில் வேலைவாய்ப்பு என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. அதனால் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் அரசுத்துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் ஐஏஎஸ், ஐஎப்எஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டுதோறும் UPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது.
EPFO கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – வரிச்சலுகை குறித்த விவரம் இதோ!
மத்திய அரசின் பெரும்பாலான பணியிடங்களுக்கு இந்த UPSC மூலமாகவே ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. இத்தேர்வுகள் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 கட்டங்களை கொண்டது. இந்த மூன்று கட்டங்களிலும் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் வைத்து, இறுதி முடிவுகள் வெளியிடப்படும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் தேர்வர்கள் பங்கேற்பர். நாடு முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மாதம் நடைபெறவிருந்த UPSC முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் போராட்டம்! அரசு எடுக்கப்போகும் முடிவு?
தற்போது அனைத்து மாநிலங்களிலும் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் UPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் தேர்வு தேதி குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் 861 பணியிடங்களுக்கான UPSC முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 5ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்ரவரி 22ம் தேதி மாலை 6 மணிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.