UPSC தேர்வு 2020 – புதிய தேதி நாளை வெளியீடு !!!
மே 20 அன்று நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்திற்குப் பிறகு, யுபிஎஸ்சி தேர்வுகளின் புதிய காலண்டர் ஜூன் 5 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டது. அதனை தேர்வர்கள் எங்கள் இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜூன் 5 ஆம் தேதி புதிய தேர்வு தேதி:
COVID-19 காரணமாக, நாடு தழுவிய கட்டுப்பாடுகளின் மூன்றாம் கட்டத்திற்குப் பிறகு நிலைமையை மறுஆய்வு செய்யத பின், ஜூன் 5 ஆம் தேதி யுபிஎஸ்சி பரீட்சைகளின் திருத்தப்பட்ட அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என மத்திய அரசு தெரிவித்தது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம், ஆண்டு தோறும் நடத்துகிறது. இதன்படி, இந்தாண்டுக்கான, முதன்மை தேர்வு, வரும், 31-ஆம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. நாளை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் புதிய காலண்டர் வெளியாக உள்ளது. தேர்வுக்கு தயாராகுபவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் UPSC தேர்வு 2020 புதிய காலண்டரை பெற்று கொள்ளலாம்.