UPSC NDA & NA (I) அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !
மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது காலியாக இருந்த 400 தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (I), 2021 (இந்திய கடற்படை அகாடமி பாடநெறி (INAC)) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ள தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம்19.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இந்த தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமிகளில் மொத்தம் 400 பணியிடங்கள் காலியாக உள்ளன. 12ம் வகுப்பு (10+2) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்ப கட்டணமாக பொது விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/- ம் மற்றும் SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் 19.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் அந்த ஆன்லைன் படிவங்களை 27.01.2021 அன்று முதல் 02.02.2021 அன்று வரை WITHDRAWAL செய்து கொள்ளலாம்.