UPSC வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பக் கட்டணம் ரூ.25/- | இறுதி வாய்ப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில் பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் ஆசிரியர் போன்ற பணிகளுக்கு காலியாக விடப்பட்டுள்ள 21 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதி 16.12.2021 முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பின் படி, பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பதவிகளுக்கு 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- பேராசிரியர் பணிக்கு ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள், இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 5 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
- இணை பேராசிரியர் பணிக்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள், கணினி அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 8 ஆண்டுகள் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழிற் துறையில் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
Join Our TNPSC Coaching Center
- ஆசிரியர் பணிக்கு திறமை உள்ள விண்ணப்பதாரர்கள், நர்சிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். B.Sc. Nursing அல்லது பணி அடிப்படையிலான B.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வரை இருக்கலாம். 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்ப ஆவணங்களில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மட்டுமே நேர்காணலுக்கான குறுகிய பட்டியலிட படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.25/- செலுத்த வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் படி அறிவிப்பில் அறிவுறுத்துகிறோம். 16.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.