யுபிஎஸ்சி மாதிரி ஆளுமைத்தேர்வுகள் விண்ணப்ப பதிவு – ஏப்ரல் 3 கடைசி நாள்!!
அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி தேர்வு மையம் மாதிரி ஆளுமை தேர்வுகளை நடத்த உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 3ம் தேதி கடைசி நாள் என்று பயிற்சி மைய இயக்குனர் இறையன்பு அறிவித்துள்ளார்.
யுபிஎஸ்சி ஆணையம்:
இந்திய நிர்வாக சேவைகள் (ஐஏஎஸ்), இந்திய போலீஸ் சேவைகள் (ஐபிஎஸ்) போன்ற பல்வேறு சிவில் சேவைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்ய யுபிஎஸ்சி தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்துகிறது. யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகள் மார்ச் 25ம் தேதி நடைபெற்றது. அத்தேர்வில் சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் படித்த 19 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
9, 10 மற்றும் 11ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!!
மாதிரி ஆளுமைதேர்வு:
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டெல்லியில் ஆளுமை தேர்வுகள் நடக்க உள்ளது. தமிழகத்தில் இருந்து ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 8 மற்றும் 9ம் தேதிகளில் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தின் சார்பில் மாதிரி ஆளுமை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மொத்தம் ஆறு குழுக்கள் மாதிரி ஆளுமை தேர்வை நடத்த உள்ளது.
விண்ணப்பம்:
மாதிரி தேர்வுகளில் தேர்வர்கள் செயல்படும் விதம், வீடியோவில் பதிவு செய்து தேர்வு முடிந்தவுடன் குறுந்தகடாக வழங்கப்படும். இதன் மூலம் தேர்வர்கள் தங்களின் குறைகளை அறிந்து ஆளுமைத் தேர்வுக்கு முன்னர் தங்களை சரி செய்து கொள்ள முடியும்.
மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அண்ணா மேலாண்மை நிலையத்திலேயே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள ஊக்கத்தொகையாக ரூ.2,000 வழங்கப்படும். இது தொடர்பான அதிக தகவல்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தின் மூலம் காணலாம் என்று பயிற்சி மைய இயக்குனர் இறையன்பு அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்