UPSC 700+ காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தற்போது சிவில் சர்வீசஸ் தேர்விற்கான E-ADMIT CARD வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் இது குறித்த கூடுதல் விவரங்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் விரிவாக வழங்கியுள்ளளோம்.
UPSC Civil Service Admit Card:
இந்தியாவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் UPSC தேர்வாணையம் 700க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் முதல் நிலை தேர்வானது (Prelims) 27.06.2021ம் தேதி அன்று நடத்தப்பட்டது. தற்போது Prelims தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Mains தேர்வானது 07.01.2022 , 08.01.2022 , 09.01.2022 , 15.01.2022 & 16.01.2022 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
Join Our TNPSC Coaching Center
தற்போது Mains தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான Admit Card வெளியாகியுள்ளது. தேர்வர்கள் Registration Id அல்லது Roll Number பயன்படுத்தி E-ADMIT CARD பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் தேர்வு நடைபெறும் தேதி இடம் குறித்த முக்கிய விவரங்களுடன் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் பொருட்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டிருக்கும். தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி E-ADMIT CARD பெற்றுக்கொள்ளலாம்.