சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றம் ?! – மத்திய அரசு பதில் என்ன ????
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக வருடந்தோறும் நடத்தப்படும் சிவில் சேவைகள் தேர்வின் நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு ,மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலமா தேர்வு செய்யப்படுவர். அதிலும் குறிப்பாக முதல் நிலை தேர்வில் திறனாய்வு சோதனைகள் இடம்பெறும்.
இந்த முறையில் மாற்றங்கள் ஏதேனும் கொண்டு வரப்படுமா என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் நலத்துறை ராஜாங்க மந்திரி பதில் அளித்தார். அதில் அவர் சிவில் சேவைகள் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை என்றும், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுகளுக்கான அடுக்கு – 3 தேர்வு முடிவுகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்