தமிழக அரசு பள்ளிகள் தரம் உயர்த்துதல் – கணக்கெடுக்கும் பணி துவக்கம்!!

0
தமிழக அரசு பள்ளிகள் தரம் உயர்த்துதல் - கணக்கெடுக்கும் பணி துவக்கம்!!
தமிழக அரசு பள்ளிகள் தரம் உயர்த்துதல் - கணக்கெடுக்கும் பணி துவக்கம்!!
தமிழக அரசு பள்ளிகள் தரம் உயர்த்துதல் – கணக்கெடுக்கும் பணி துவக்கம்!!

தமிழகத்தில் 2023 – 2024ம் கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகள் குறித்து பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்கியுள்ளது.

கணக்கெடுப்பு:

தமிழகத்திற்கு வரவிருக்கும் கல்வி ஆண்டு புதிதாக பள்ளிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட உள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அஞ்சல் தேர்வு 2023 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? மதுரை எம்.பி தகவல்!!

Follow our Instagram for more Latest Updates

அதில் புதிதாக பள்ளிகள் தொடங்க வேண்டிய இடங்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகள் குறித்த விவரங்களை சேர்த்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கும் பகுதிகள் மற்றும் தரம் உயர்த்த வேண்டிய பள்ளியில் குறித்த பட்டியலை தயாரிக்கும் பணி இன்று துவங்கியுள்ளது.

இது குறித்து பேசிய அம்மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஒவ்வொரு தாலுகாவிலும் தரம் உயர்த்த வேண்டிய பள்ளியில் கொடுத்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் எண்ணிக்கை மக்கள் தொகை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகள் துவங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!