விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பார்வதியை மிரட்டும் விக்கி!
பார்வதியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என பார்வதியிடம் விக்கி தொடர்ந்து பிரச்சினை செய்து கொண்டே இருக்கிறார். தற்போது இருவரும் காதலிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வீடு முழுக்க ஒட்டி விக்கி பார்வதியை மிரட்டுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ராஜா ராணி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பார்வதிக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி இருக்கும் நிலையில் திருமணம் கண்டிப்பாக நடைபெறுமா அல்லது கடைசி நேரத்தில் விக்கி வந்து குழப்பம் செய்து திருமணத்தை நிறுத்தி விடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். பார்வதியின் திருமணத்தை நிறுத்தி பாஸ்கருடன் அர்ச்சனாவின் தங்கச்சியை திருமணம் செய்து வைக்க அர்ச்சனா பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இருவரும் காதலித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி மிரட்டும் படி விக்கியிடம் அர்ச்சனா ஐடியா கொடுக்கிறார். பின்பு, திருமணத்திற்காக பார்வதி பட்டுசேலை எடுப்பதற்காக ஜவுளிக் கடைக்குச் சென்றபோது கூட உடை மாற்றும் அறையில் நின்றுகொண்டு பார்வதியிடம் விக்கி தகராறு செய்கிறார். உடை மாற்றும் அறையில் ஏதோ குழப்பம் இருக்கிறது என சந்தியாவிற்கு சந்தேகம் வருகிறது. ஆனால், சந்தியா பார்வதியிடம் கேட்டபோது எதுவும் பிரச்சினை இல்லை என்று கூறிவிடுகிறார்.
முடிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ தொடர் – விரைவில் சீசன் 2 அறிமுகம்!
பின்பு பார்வதி பதற்றத்துடன் வீட்டிற்கு வந்த பிறகு வீடு முழுக்க பார்வதியும் விக்கியும் காதலித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வீடு முழுக்க ஒட்டி வைத்து இருக்கிறார். அந்த புகைப்படங்களைப் பார்த்ததும் பார்வதி அதிர்ச்சி அடைகிறார். உடனே அனைத்து புகைப்படங்களையும் யாருக்கும் தெரியாமல் பார்வதி ஒளித்து வைக்கிறார். பின்பு, பார்வதிக்கு விக்கி கால் செய்து திருமணத்திற்கு முன்னால் ஒரு தடவை என்னுடன் இருந்தால் போதும் உன்னை விட்டு விடுகிறேன் என விக்கி மிரட்டுகிறார். பின்பு சந்தியாவும் சரவணனும் சேர்ந்து என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்கிறோம் நீ கவலைப்படாதே என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.