விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பார்வதியை கடத்தியவனை கண்டுபிடிக்கும் சந்தியா!

0
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - பார்வதியை கடத்தியவனை கண்டுபிடிக்கும் சந்தியா!
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - பார்வதியை கடத்தியவனை கண்டுபிடிக்கும் சந்தியா!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பார்வதியை கடத்தியவனை கண்டுபிடிக்கும் சந்தியா!

கடந்த வாரம் தான் பார்வதிக்கும், பாஸ்கருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது பார்வதியை யாரோ கடத்தி சென்றுள்ள நிலையில் அவர் யார் என்பதை சந்தியா கண்டுபிடிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ராஜா ராணி சீசன் 2:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. விக்கியும், பார்வதியும் காதலித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனைவரிடமும் காட்டி திருமணத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்டியும் பாஸ்கருக்கும், பார்வதிக்கும் திருமணம் முடிந்து விட்டது. விக்கியை தூண்டி விட்டு எப்படியாவது பார்வதியின் திருமணத்தை நிறுத்தி பாஸ்கருக்கு அர்ச்சனாவின் தங்கச்சியை திருமணம் செய்து வைக்கலாம் என அர்ச்சனா பிளான் செய்து கொண்டிருந்தார்.

Exams Daily Mobile App Download

ஆனால், பார்வதிக்கு துணையாக சரவணனும் சந்தியாவும் இருந்தார்கள். பார்வதியும் விக்கியும் காதலித்ததில் இருந்து விக்கியின் சுயரூபம் தெரிந்து விக்கியை விட்டு விலக நினைத்தாலும் விக்கி பிரச்சனை செய்வது வரை உள்ள அனைத்தையும் பாஸ்கரின் அம்மாவிடம் சந்தியா கூறிவிட்டார். பாஸ்கர் பார்வதியின் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் சரியாக விக்கி திருமணத்தை நிறுத்தி அனைவரின் முன்னிலையிலும் விக்கியும் பார்வதியும் இருக்கும் புகைப்படத்தை காட்டுகிறார். ஆனால், விக்கியின் சூழ்ச்சி தோல்வியடைந்து விட்டது. விக்கியின் சதி வேலைகளையும் தாண்டி பாஸ்கர் மற்றும் பார்வதியின் திருமணம் முடிந்துவிட்டது.

கண்ணம்மாவை புகழ்ந்து தள்ளிய பாரதி – கடுப்பான வெண்பா! சீரியலில் புதிய திருப்பம்!

இதற்கு பிறகு பார்வதியை யாரோ கடத்தி சென்று விட்டார்கள். பார்வதியை யார் கடத்திருக்க முடியும் என குடும்பத்தினர்கள் அனைவரும் பதட்டமாக இருக்கும் நிலையில் அர்ச்சனா பார்வதி ஏற்கனவே விக்கியை காதலித்து கொண்டிருந்தார். தற்போது யாரை காதலித்து வீட்டை விட்டு ஓடியிருக்கிறாரோ என அர்ச்சனா கூறுகிறார். பிறகு காவல் நிலையத்தில் பார்வதியை காணவில்லை என புகார் கொடுக்கின்றனர். உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கிறதா என கேட்க விக்கியின் அப்பா மேல் தான் சந்தேகமாக இருக்கிறது என சந்தியா கூறுகிறார். உண்மையாகவே பார்வதியை யார் கடத்தியிருப்பார்கள், பார்வதியை சந்தியா கண்டுபிடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!