விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பார்வதி பற்றி அறிந்த பாஸ்கர்!
விக்கி மற்றும் பார்வதி இருவரும் காதலித்த விஷயம் மற்றும் காதலித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் பாஸ்கரிடம் விக்கி போட்டு உடைத்து விடுகிறார். இதற்குப் பிறகும் பாஸ்கர் திருமணம் செய்து கொள்வாரா என்பதை பார்க்கலாம்.
ராஜா ராணி 2:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9.30 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பார்வதியின் திருமணம் நடைபெறுமா, கடைசி நேரத்தில் விக்கி வந்து திருமணத்தை நிறுத்தி விடுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பெண்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை கடன் – விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறைகள்!
பார்வதியின் திருமணத்தை நிறுத்தி பாஸ்கருடன் அர்ச்சனாவின் தங்கச்சியை திருமணம் செய்து வைக்க அர்ச்சனா பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் அர்ச்சனா விக்கி மற்றும் பார்வதி காதலித்துக் கொண்டிருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் விக்கியின் மொபைலுக்கு அனுப்பி பாஸ்கரிடம் காண்பிக்குமாறு கூறுகிறார். விக்கியும் அதைப்போல் பாஸ்கரிடம் அந்த புகைப்படங்களை காட்டி இவரையா திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என கண்டவாறு பேசுகிறார்.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
ஆரம்பத்தில் பாஸ்கரும் நம்புவது போல நடித்து பின் விக்கியின் கன்னத்தில் ஒரு அறை விட்டிருக்கிறார். உடனே விக்கி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். நீயும் பார்வதியும் காதலித்த விஷயம் எனக்கு எப்போதோ தெரியும். எனக்கு சரவணன் முழு உண்மையும் கூறிவிட்டார். நீ இந்த புகைப்படத்தை காட்டி என்னை முட்டாளாக்க முடியாது எனக் கூறுகிறார். இதற்குப் பிறகும் அர்ச்சனா பார்வதியும் திருமணத்தை நிறுத்த ஏதேனும் பிளான் போடுவாரா அல்லது திருமணத்தை கண்டு ரசிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.