முதல் சமையல் ஆர்டரா? கணவரின் திருமணமா? பாக்கியாவின் முடிவு என்ன? – சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் திருமண விழாவில் பாக்கியா சமைக்க அவருக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. திருமண கோலத்தில் கோபி ராதிகாவை பார்த்த பாக்கியா கதறி அழும் காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பாராத விதத்தில் பல திருப்பங்கள் வந்துள்ளது. கோபி பாக்கியா பிரிந்துவிட கோபியின் குடும்பத்தை பாக்கியா கவனிக்க இருக்கிறார். அதற்கு பணம் அதிகம் தேவைப்பட தனக்கு தெரிந்த சமையல் தொழிலில் பெரிய ஆளாக வர வேண்டும் என நினைத்து பெரிய திருமண மண்டபம் காண்ட்ராக்ட் வாங்க இன்டெர்வியூ அட்டென்ட் செய்கிறார். அதில் தேர்வாகினாலும் பெண் எப்படி எல்லாம் சரியாக செய்வாள் என்ற சந்தேகத்தில், முதலில் சிறிய மினி மண்டபத்தில் சமையல் ஆர்டரை பாக்கியாவிற்கு கொடுக்கின்றனர்.
பாக்கியா ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தில் இருக்க, ஆனால் அதில் பெரிய குண்டு வெடிக்க இருப்பது பாக்கியாவிற்கு தெரியாமல் இருக்கிறது. அதாவது பாக்கியா வாங்கிய சமையல் ஆர்டர் கோபி ராதிகா திருமணத்திற்கானது. இந்த விஷயம் பாக்கியாவிற்கு தெரிய வர அவர் அதை எப்படி ஏற்றுக் கொள்வார் என்பது எல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. மேலும் பாக்கியா தனக்கு கொடுத்த சமையல் ஆர்டரை செய்வாரா, அல்லது கோபியை நினைத்து வருத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்புடன் கதை நகர்கிறது.
Exams Daily Mobile App Download
ஆனால் வெளியான தகவலின் படி பாக்கியா தன்னை வேண்டாம் என சொன்ன கோபி முன்னால் நன்றாக வாழ வேண்டும் என்பதால், தனக்கு கொடுத்த முதல் ஆர்டரை சிறப்பாக செய்து கொடுத்து பெயர் வாங்க இருக்கிறார். அதற்காக அவர் தன்னுடைய மனதை கல்லாகி கோபி திருமணத்தில் வேலை செய்ய போகிறார். மேலும் கோபி ராதிகா திருமணத்தில் என்னவெல்லாம் திருப்பங்கள் வர இருக்கிறது. ஈஸ்வரி, இனியா, கோபியின் மறுமணத்தை ஏற்றுக் கொள்வார்களா என்பது எல்லாம் கதையில் பெரிய ட்விஸ்ட்டாக இருக்க போகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்