தமிழகத்தில் 52% வரைக்கும் மின்கட்டணம் உயர்வு? வலுக்கும் எதிர்ப்புகள்!
தமிழகத்தில் மின்சார துறையில் உள்ள கடனை ஈடுகட்டும் விதமாக திடீரென மின்கட்டணம் 52% வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம்:
தமிழகத்தில் மின்சார துறையில் ஏகப்பட்ட கடன் வந்துள்ளதால் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு யூனிட் மின் கட்டணம் 27.50 காசு முதல் ரூ1.25 வரைக்கும் உயர்த்தப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஒரு சில பிரிவினை சேர்ந்த பொது மக்களுக்கு 52% வரைக்கும் மின்கட்டணம் உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை கட்டணம், மீட்டர் காப்பு தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம் என அனைத்து சேவை கட்டணமும் பல மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டில் மேற்குறிப்பிட்டுள்ள சேவைகளுக்கான கட்டணம் ரூ.7,450 ஆக இருந்தது. ஆனால், தற்போது சேவை கட்டணம், மீட்டர் காப்பு தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம் போன்ற சேவை கட்டணம் ரூ.54,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இது வரைக்கும் தமிழகத்தில் 100 யூனிட் வரைக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கூடுதல் மின் இணைப்பு பெற்றால் 100 யூனிட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்? முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
அதே போல புதிய ஒருமுனைமின் இணைப்பு கட்டணம் 1,600 ரூபாயிலிருந்து ரூ.9,620 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மின்கட்டணம் 1,130 ரூபாயிலிருந்து 1,725 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பாராத நேரத்தில் பலமடங்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், மின் கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்