Wipro ஊழியர்களுக்கு 15% வரைக்கும் சம்பள உயர்வு , போனஸ்? டபுள் ஜாக்பாட்!

0
Wipro ஊழியர்களுக்கு 15% வரைக்கும் சம்பள உயர்வு , போனஸ்? டபுள் ஜாக்பாட்!
Wipro ஊழியர்களுக்கு 15% வரைக்கும் சம்பள உயர்வு , போனஸ்? டபுள் ஜாக்பாட்!
Wipro ஊழியர்களுக்கு 15% வரைக்கும் சம்பள உயர்வு , போனஸ்? டபுள் ஜாக்பாட்!

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, புரமோஷன் உள்ளிட்டவற்றை வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் விப்ரோவின் இந்த சம்பள அறிவிப்பானது நடுத்தர நிர்வாகம் வரையில் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டது. விப்ரோ ஊழியர்களுக்கு இது ஒரு சூப்பரான அறிவிப்பு என்றே கூறலாம்.

ஜாக்பாட் அறிவிப்பு:

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவில் (Wipro) இருந்து ஊழியர்கள் வெளியேறுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஊழியர்களை தக்கவைப்பதற்காக சம்பள உயர்வு, போனஸ் உள்ளிட்டவற்றை வழங்க விப்ரோ நிறுவனம் முடிவு செய்து உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. கடந்த மார்ச் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறிய விகிதம் 23.8% என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில காலாண்டுகளாக, தொடர்ந்து அட்ரிஷன் விகிதத்தினால் மோசமான தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறது விப்ரோ நிறுவனம்.

இதற்கிடையில் அட்ரிஷன் விகிதத்தினை கட்டுக்குள் வைக்க ஊழியர்களுக்கு, காலாண்டுக்கு ஒரு முறை சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வு என சமீபத்தில் அறிவித்த நிலையில், இது செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .இது குறித்து செய்திக்குறிப்பு வெளியாகி உள்ளது. அதில் விப்ரோவின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான முந்தைய அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வெற்றிகரமாக முதல் காலாண்டினை முடித்துள்ளோம். எனினும் மாறக்கூடிய ஊதியத்தின் அளவு குறித்து எங்களிடம் எந்த கருத்தும் இல்லை என மெயிலில் தெரிவித்துள்ளது.

இனி இ-சேவை மையங்கள் மூலம் PSTM சான்றிதழ்கள் – அரசாணை வெளியீடு!

கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 18.8% ஆக இருந்த மார்ஜின் விகிதம், நடப்பு ஆண்டில் 15% ஆக குறைந்துள்ளது. கொரோனாவின் வருகைக்கு பிறகு விப்ரோவில் பணியமர்த்தல் என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்த காலகட்டத்தில் நிறுவனம் அட்ரிஷன் பிரச்சனையையும் எதிர்கொண்டது. அட்ரிஷன் விகிதத்தினை குறைக்கவும், ஊழியர்களை தக்கவைத்து கொள்ளவும், ஒவ்வொரு காலாண்டிலும் பதவி உயர்வை வழங்க உள்ளதாக அறிவித்தது. இதன்படி செப்டம்பரில் விப்ரோ நிறுவனம் தனது பெரும்பாலான ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், டாப் பர்ஃபார்மர்களுக்கு சுமார் 15% அல்லது அதற்கு மேல் சம்பள உயர்வு வழங்கப்படும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!