ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!

0
ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு உத்தரவு!!
ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு உத்தரவு!!
ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

முழு ஊரடங்கு:

உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை 7,66,360 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 9,480 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, உத்தரபிரதேச அரசு இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை அரியர் தேர்வுகள் ஏப்ரல் 2021 – அட்டவணை வெளியீடு!!

மேலும் ஊரடங்கு காலகட்டத்தில் அத்தியாவசிய மற்றும் மருத்துவ அவசர சேவைகள் மட்டுமே செயல்படும். இது தொடர்பாக தேவையான விழிப்புணர்வு பணிகளும் செய்யப்பட வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். முகக்கவசம் இல்லாமல் 2வது முறையாக பிடிபட்டால், 10 மடங்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஏற்கனவே உத்திர பிரதேசத்தின் பத்து மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவுக்கான நேரங்களை நிர்வாகம் நேற்று திருத்தி அமைத்தது. ஊரடங்கு உத்தரவு இப்போது இரவு 8 மணிக்கு தொடங்கி காலை 7 மணிக்கு முடிவடையும். முன்னதாக, ஊரடங்கு உத்தரவு நேரம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இருந்தது. உத்தரபிரதேச அரசும் மே 15 வரை அனைத்து பள்ளிகளையும் மூடி வாரிய தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!