பண்டிகை எதிரொலி: ஒன்றல்ல…இரண்டு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க உத்தரவு – அறிவிப்பை வெளியிட்ட உத்தரபிரதேசம்!!
நாட்டில் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள். இந்நிலையில் உத்தர பிரதேச அரசு இலவசமாக இரண்டு சிலிண்டர்களை வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த இலவச சிலிண்டரை பெறுவதற்கான நிபந்தனைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
இலவச சிலிண்டர்
நாட்டில் பணவீக்கம் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதை தொடர்ந்து தற்போது, சிலிண்டர் எரிவாயு விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சாமானிய மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கிக் தவித்து வருகின்றனர். இவர்களை நிதி நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் விதமாக தற்போது உத்தரபிரதேச அரசு சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
2023: சென்னையில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!
அதாவது ஹோலி பண்டிகையை முன்னிட்டு இரண்டு இலவச சிலிண்டர்களை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரம் மற்றும் தளபாடத்துறைக்கு ஹோலி பண்டிகையில் முதல் இலவச எரிவாயு சிலிண்டர்களை வழங்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் இந்த இலவச சிலிண்டர் குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச சிலிண்டர் பெற உத்தரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. அதிலும் குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. அத்துடன் குறைந்தபட்சமாக 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதே போல், பிபிஎல் ரேஷன் கார்டு மற்றும் பிஎம் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.