இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய நேர மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா 2 ஆம் அலை பாதிப்புகளில் வீழ்ச்சியை கண்டு வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 19 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? உ.பி., அரசுக்கு கோரிக்கை!
முன்னதாக உத்தரபிரதேச மாநில அரசு கடந்த மாதத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவை இரண்டு மணி நேரம் தளர்த்தியது. ஆனால் அந்நாட்களில் இரவு 9 மணி வரை கடைகள், மால்கள் மற்றும் உணவகங்களை திறக்க அரசு அனுமதித்தது. இதை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 புதிய பாதிப்புகள் மற்றும் 4 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன்? ஜெனிபர் பதில்!
இந்த புதிய பாதிப்புகள் லக்னோ, வாரணாசி, கான்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளை மீண்டுமாக திறக்க உத்தரபிரதேச அரசு பரிசீலனை செய்து வருகிறது.