ஜூன் 30 வரை 144 தடை உத்தரவு அமல் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு!!
உத்தரபிரதேச மாநிலத்தில் கவுதம் புத்தா நகரில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர அம்மாவட்டத்தில் பின்பற்றப்பட வேண்டிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு:
உத்தரபிரதேசத்தின் கவுதம் புத்தா நகரில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, அவை ஜூன் 30 வரை நடைமுறைப்படுத்தப்படும் என கூடுதல் துணை போலீஸ் ஆணையர் ஷ்ரத்தா பாண்டே தெரிவித்துள்ளார். கவுதம் புத்தா நகரில் நேற்று ஓரு நாளில் மட்டும் கொரோனா புதிய வழக்குகள் 68 ஆகவும், பலி எண்ணிக்கை 1 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் அடிப்படையில் அம்மாவட்டத்தில் மட்டும் இதுவரை 62,356 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 60,833 பேர் குணமடைந்துள்ளனர். தவிர 1,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.72 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 97.55 சதவீதமாகவும் உள்ளது. அந்த வகையில் நோய் தடுப்பின் ஒரு பகுதியாக அம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து,
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்க அனுமதி – அரசு உத்தரவு!!
- பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
- திரையரங்குகள், ஜிம்கள் மற்றும் நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்கும்.
- உணவகங்களில் வீட்டு விநியோக சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
- திருமண விழாக்களில் 25 பேரும், இறப்பு நிகழ்வுகளில் 20 பேரும் கலந்து கொள்ளலாம்.
- பொது போக்குவரத்து 50 சதவீதம் வரை இயங்கலாம்.
- பொது ஊர்வலங்கள் அனுமதிக்கப்படாது.
- மதுபான கடைகள் பொது இடங்களில் செயல்பட அனுமதிக்கப்படாது.