பிப்ரவரி 15 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்து பட்டப்படிப்பு கல்லூரிகள், அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி கற்கும் பிற கல்வி நிறுவனங்களை பிப்ரவரி 15 முதல் மீண்டும் திறக்க உத்தரபிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது.
கல்வி நிறுவனங்கள் திறப்பு:
உத்திர பிரதேச மாநிலத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் நவம்பர் 23, 2020 அன்று மீண்டும் கட்டுப்பாடுகளுடன் பகுதி நேரமாக திறக்கப்பட்டன. ஆனால் பிப்ரவரி 15 முதல் அனைத்து பல்கலைக்கழகங்கள், பட்டப்படிப்பு கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் வழக்கமான முறையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை – பிப்.,15 வரை வாய்ப்பு!!
அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. இதனுடன், சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும். மேலும் கல்லூரி வளாகத்தை மீண்டும் திறப்பதற்கு முன்பு முழுமையாக சுத்தப்படுத்துமாறு உயர் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஒரு மாணவர், ஆசிரியர் அல்லது பணியாளருக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு முதலுதவி அளித்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். மாணவர்கள் அல்லது ஊழியர்களில் COVID-19 இன் அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக சோதனை செய்து முடிவுகளை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்