ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மே 23 முதல் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்!
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட கோவை, சேலம் உள்ளிட்ட பகுதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மே 23ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. ரயில் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம் குறித்த பட்டியலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
ரயில்கள் இயக்கம்:
இந்தியாவில் பரவிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் பயணிகளின் வருகை குறைவால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வேத்துறை பெரும் சரிவை சந்தித்து. இந்தியாவில் ரயில் சேவை என்பது அத்தியாவசிய சேவையில் ஒன்றாக இருப்பதால் கொரோனா சற்று குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியது. கொரோனா முழுமையாக குறையாமல் உள்ளதால் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 76 லட்சம் பேர் – முக்கிய புள்ளி விபரங்கள் வெளியீடு!
பயணிகள் ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பல சலுகைகளும் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது போர்டிங் பாயிண்டை மாற்றுதல், ஒன்றுக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியும். தற்போது ரயில் பயணிகளின் வசதிக்காக தற்போது முன்பதிவில்லா பெட்டிகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்தப்பட்ட 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மே 23ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி கோவை – மேட்டுப்பாளையம் முன்பதிவு இல்லாத ஊட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.30 மணிக்கு சென்றடையும். மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை வந்து சேரும்.சேலம்- விருத்தாசலம்- சேலம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேலத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு விருத்தாசலத்திற்கு பகல் 1.05 மணிக்கு சென்றடையும் விருத்தாச்சலத்தில் இருந்து பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு சேலம் வந்தடையும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.