திருமணம் ஆகாத பெண்களுக்கு கருக்கலைப்புக்கு உரிமை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் ஆகாத பெண்களுக்கு கருக்கலைப்புக்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கில் அதிரடி உத்தரவு ஒன்றை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கருக்கலைப்பு:
இந்தியாவில் கருக்கலைப்பு என்பது சட்டப்படி குற்றமாக பார்க்கப்பட்டது. மேலும் கருக்கலைப்பு மேற்கொள்ள சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஒரு பெண் தன் கணவனால் வன்புணர்வு செய்யப்பட்டு அதன் மூலமாக உருவான கருவை, கலைப்பதற்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கருவுற்றால் இதனை கலைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் சிறுமிகள் கருவுற்றாலும், கருவில் இருக்க கூடிய குழந்தை ஊனமுற்று இருந்தாலும் அக்கருவை வேண்டாம் என நினைப்பவர்களும் கருவை கலைக்கலாம்.
இது போன்று வேறு ஏதேனும் மருத்துவ காரணங்கள் இருப்பினும் அதற்காகவும் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருக்கலைப்பை யார்? எந்தெந்த சூழலில் செய்ய வேண்டும் போன்ற விதிமுறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு சந்திரசூட் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில், சட்டப்பூர்வமாகவும், பாதுகாப்பாகவும் கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என நீதிபதி தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தம் அறிவிப்பு.. ஸ்தம்பித்த மின்சாரத்துறை – வலுக்கும் எதிர்ப்புகள்!
Exams Daily Mobile App Download
அதாவது திருமணம் ஆகாத பெண்களும் தங்களின் 20 முதல் 24 வார கருவை கலைக்க உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கருக்கலைப்பின் சட்ட விதிகளில் திருமணமாகாத பெண்களை கருக்கலைப்புக்கு மறுப்பது என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் நீதிபதி கூறியுள்ளார். ஆனால் அதே சமயம் பாதுகாப்பான முறையில் செய்ய வேண்டியது அவசியமானதாகும். இதையடுத்து திருமணத்திற்கு பின்பு மனைவியின் அனுமதியின்றி கணவர் பாலியல் வன்கொடுமை செய்வதை கருக்கலைப்புக்கான விதிகளின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்