திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.. வினோத அறிவிப்பை வெளியிட்ட சீன மாகாணம்!
சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் தொகையை அதிகரிக்க திருமணமாகாத தம்பதிகளுக்கு அறிவிப்பு ஒன்றை சீனாவின் சிச்சுவான் மாகாண அரசு வெளியிட்டுள்ளது .
மக்கள் தொகை
சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக திருமணம் மற்றும் பிறப்பு விகிதங்கள் குறைந்து கொண்டே வருகிறது. ஆதலால் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரே ஒரு குழந்தை கொள்கை நீக்கப்பட்டது.
சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை.. அதிரடி சரிவு – இன்றைய நகை விலை நிலவரம் உள்ளே!
Follow our Instagram for more Latest Updates
மேலும் கடந்த ஆண்டு முதல் மூன்று குழந்தைகள் வரை பெற்றெடுத்து கொள்ளலாம் என்றும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் பிறப்பு விகிதங்கள் அதிகரிக்காமல் உள்ளது. இந்த நிலையில் சீனாவின் 5வது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான சிச்சுவான் மாகாண அரசு திருமணமாகாத தம்பதியர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இனி மாகாணத்தில் திருமணமாகாமல் இணைந்து வாழும் தம்பதியரும் குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் ஒருவர் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் திருமணமான தம்பதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள், மானியங்கள் உள்ளிட்டவை திருமணமாகாத தம்பதிகளுக்கும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த புதிய விதிமுறையானது வருகிற 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.