விடுமுறையை அள்ளி தந்த பிரபல IT நிறுவனம் – மகிழ்ச்சியில் ஊழியர்கள்!
அமெரிக்காவில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆன மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை:
உலகம் முழுவதும் கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி அளித்தது. இந்த WFH முறையில் ஊழியர்கள் அதிக நேரம் வீட்டிலிருந்து பணியாற்றுவதால் பல நோய்களுக்கு ஆளானார்கள்.
Railway Budget 2023 : ரயில் துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றம்? முழு விவரம் உள்ளே!!
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாகவும் ஆய்வு தகவல்கள் வெளியானது. இதனை கருத்தில் கொண்டு முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சற்று ஓய்வளிக்கும் வகையில் ஊதியத்துடன் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது. அத்துடன் ஹைபிரிட் மாடல் என்ற வேலை முறையையும் கொண்டு வந்தது.
உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. அதாவது ஜனவரி 16 ஆம் தேதிக்கு பிறகு காலவரையற்ற விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நீங்கள் பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்களுக்கான ஊதியத்தை ஏப்ரல் மாதம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.