கல்வி கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க உத்தரவிட முடியாது !! – உச்ச நீதிமன்றம் அதிரடி
நாடு முழுவதும் கல்வி கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் என மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. இருப்பினும் இறுதி பருவ தேர்வு மட்டும் கட்டாயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு தேர்வு ஆனது யுஜிசி விதிமுறைப்படி நடைபெற தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு தங்களின் கல்வி கட்டணத்தினை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், சட்ட கல்வி மாணவர் ராலே ராணா வழக்கு ஒன்றினை தொடர்ந்து இருந்தார்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் கல்வி கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க உத்தரவிட முடியாது எனவும், வேண்டுமானால் மாணவர்கள் தங்கள் மாநில சார்ந்த நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடரலாம் எனவும் கூறி வழக்கினை தள்ளுபடி செய்தனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்