தமிழ்நாடு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயப் பாடமாக தமிழ் மொழி – மத்திய அமைச்சர் விளக்கம்!
2023-24ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13) துவங்கி இருக்கும் நிலையில் அதில் தமிழ்நாடு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் அமல்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் கட்டாயம்
மத்திய பட்ஜெட் அறிக்கை கடந்த பிப் 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி பிப் 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
அதில் தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் 15 பள்ளிகளில் மட்டுமே தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறது. அதனால் மொத்தம் அந்த பள்ளிகளில் பயிலும் 63,809 மாணவர்களில் 6,589 மாணவர்கள் மட்டுமே தமிழ் படிக்கின்றனர்.
தமிழகத்தில் காலியாக 272 நீதிபதி பணியிடங்கள் நிரப்புதல் -வக்கீல்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்!
மற்ற பள்ளிகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் உருவாக்கும் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மாணவர்களை கருத்தில் கொண்டு கூடுதல் மொழியாக மட்டுமே மாநில மொழிகள் பயிற்றுவிக்கப்படும். 15 அல்லது அதற்கு மேல் உள்ள மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் மாநில மொழிகள் பயிற்றுவிக்கப்படும் என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.