பெட்ரோல், டீசல் விலை உயர்வு – மத்திய அமைச்சர் விளக்கம்!!
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சரின் விளக்கம்:
நாட்டில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இதனால் மத்திய அரசின் மேல் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். சில இடங்களில் பெட்ரோல், டீசல் விலை சதத்தை நெருங்கி உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96.23 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து உள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் ஒரு மாத கால ஆட்சி – உங்களின் மதிப்பெண் என்ன?
கச்சா எண்ணெயின் விலை குறையும் போது, நிச்சயமாக பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று கூறினார். மேலும், ஜி.எஸ்.டி.,க்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வருவதே தனது விருப்பம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக சரக்கு மற்றும் சேவை வரிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டு வருவதற்கு மத்திய அரசிடம் பல எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.