மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28 விழுக்காடு உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு ஏப்ரலில் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தி ஒப்புதல் அளித்தது அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் பல லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Reliance Jio வின் ரூ.100க்கான ரீசார்ஜ் திட்டம் – முழு விவரம் இதோ!
இதனை தொடர்ந்து ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநில அரசுகள், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை அடுத்து அசாம் மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 விழுக்காடு வரை உயர்த்துவதாக அறிவிப்பினை வெளியிட்டது. அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை உயர்த்த கோரிய கோரிக்கை நிறைவேறியதாகவும், இதனால் பலர் பயன் பெறுவர் என்றும் கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அசாம் மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து கூடுதலாக 11 விழுக்காடு உயர்த்துவதற்கு உத்தரவு அளித்துள்ளது. மேலும் சம்பள உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 விழுக்காடாக உயர்த்தப்பட்டது குறித்து நிதி அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது போன்ற சம்பள உயர்வு நடவடிக்கையினால் மாதம் 200 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.