மத்திய பட்ஜெட்டில் நிறைவேறவுள்ள கோரிக்கை? கூடுதலாக ரூ.2000 உதவித்தொகை – எதிர்பார்ப்பில் விவசாயிகள்!!
மத்திய அரசின் செயல்படுத்தப்பட்டு வரும் PM Kisan திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த தொகையை ரூ.8000 என உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
PM Kisan:
நாட்டில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அத்துடன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி 1ம் தேதி அன்று தாக்கல் செய்ய உள்ளார். இதில் விவசாயத்திற்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது PM Kisan திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.2000 என மொத்தமாக ரூ.6000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதுவரை இத்திட்டத்தின் கீழ் 12 தவணை வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 13 தவணை தொகை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. அதன்படி இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மாதத்துக்கு ரூ.500 மட்டுமே கிடைக்கிறது. ஆனால் நெல் அறுவடைக்கு ரூ.3,500யும், அத்துடன் கோதுமை அறுவடைக்கு ரூ.3,500 வரையும் செலவாகிறது.
தனியார் வங்கியில் வேலைவாய்ப்பை அளிக்கும் தமிழக அரசின் இலவச பயிற்சி – 100% பணி உறுதி!
ஆதலால் PM Kisan திட்டத்தின் கீழ் வழங்கும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி மத்திய அரசின் PM Kisan திட்டத்தின் கீழ் ரூபாய் 8000 வழங்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.