ஜூலை 15 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – யூனியன் அரசு!
புதுச்சேரியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவானது ஜூலை 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் அதிகரித்து வந்ததை அடுத்து மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கைகள் சற்று சரிவை கண்டுள்ளதால், சில தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தமிழக தனியார் நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – தடுப்பூசி கட்டாயம்!
தொடர்ந்து யூனியன் பிரதேசத்தில் முழு ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை ஜூலை 15 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்க கட்டுப்பாடுகள் இன்றுடன் (ஜூன் 30) முடிவடைந்துள்ள நிலையில் இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 15 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘யூனியன் பிரதேசம் முழுவதும் தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்.
Airtel வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!
தொடர்ந்து தினசரி காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியாவசிய கடைகள் மற்றும் மற்ற கடைகள் அனைத்தும் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. தவிர போக்குவரத்து தளர்வுகளாக பேருந்துகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் இரவு 9 மணி வரை இயங்கலாம். அனைத்து நாட்களிலும் சரக்கு வாகனங்கள் வழக்கம் போல இயங்கலாம். முன்னமே அறிவித்தது போல திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், வணிக வளாகங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.
ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதி – பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிவிப்பு!!
மேலும் உணவகங்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 50% இருக்கை வசதிகளுடன் செயல்படலாம். அதே போல கடற்கரை சாலை, பூங்காக்கள், தாவரவியல் பூங்கா உள்ளிட்டவை இரவு 9 மணி வரை பார்வையாளர்களுக்காக திறக்க அனுமதிக்கப்படுகிறது. கூடுதலாக காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கும். மேலும் விவசாய பணிகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. பொது மக்களின் வசதிக்காக வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள், ATM இயந்திரங்கள் போன்றவை முழு நேரமும் செயல்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.