புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் – நிதியமைச்சர் விளக்கம்!
கடந்த 2004ஆம் ஆண்டு அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு கடந்த 29ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்ததாக பல வதந்திகள் பரவி கொண்டிருப்பதாக நிதியமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம்:
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என சில பாதகமான அம்சங்கள் இடம் பெற்ற காரணத்தினால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என அரசு ஊழியர்கள் கேட்டபடி இருக்கின்றனர். ஊழியர்கள் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தும் அந்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
Exams Daily Mobile App Download
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தற்போது வரைக்கும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே 29-ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்ததாகவும், அந்த கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்ததாகவும் சமூக வலை பக்கங்களில் ஒரு அறிக்கை பரவியது. அதாவது அந்த அறிக்கையில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாக ஓய்வூதிய நிதி மத்திய அரசு பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்ததாக பல செய்திகள் பரவியது.
வங்கித் துறையில் வேலை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
பல கோரிக்கைகளுக்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் அமலானதால் அரசு ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்ததாக பரவிய செய்தி உண்மையல்ல. மே 29-ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி ஆலோசிக்கப்பட்டது எனக் கூறிய தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு அல்லது பரிந்துரைக்கும் எண்ணம் தற்போது வரைக்கும் மத்திய அரசு பரிசீலனையில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.