4 கோடி மாணவர்களுக்கு ரூ.35,219 கோடி ‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித்தொகை – யூனியன் பட்ஜெட்!!
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி எஸ்சி மாணவர்களுக்கு ரூ.35,219 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக மத்திய பட்ஜெட் கூட்டத்தின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
எஸ்சி மாணவர்களுக்கான நிதி:
எஸ்சி பிரிவு மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு 10 ஆம் வகுப்பிற்கு பிறகு மேற்படிப்பு படிப்பதை ஊக்குவிக்க PMS-SC எனப்படும் ‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெற ரூ.2.50 லட்சம் ஆண்டு வருமானம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பிற மொழி மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பு – தமிழக அரசிடம் கோரிக்கை!!
இந்த உதவித்தொகை, பராமரிப்புப் படி, கல்வி நிறுவனங்கள் வழங்காத கட்டணம், கல்வி சுற்றுலா, ஆய்வக அறிக்கை உள்ளிட்டவற்றை முக்கிய கருத்தாக கொண்டு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இதுகுறித்து பல விமர்சனங்கள் வெளியான நிலையில் நேற்று நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மே மாதத்தில் 11 நாட்கள் நடைபெறும் ‘யுஜிசி நெட்’ தேர்வுகள் – மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
அதில் மத்திய நிதி அமைச்சர் கூறியதாவது, “ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித்தொகை திட்டம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.35,219 கோடி போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 4 கோடி எஸ்சி மாணவர்கள் பயன்பெறுவார்கள்,” இவ்வாறு அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Why give all scholarships to sc category only. Please give all categories.