பட்ஜெட் 2023: சாமானிய மக்களுக்கான நிவாரணம் – குறையும் மருத்துவ செலவுகள்? வெளியான தகவல்!
நாட்டில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மருத்துவ செலவுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சிகிச்சைக்கான நிவாரணம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிவாரணம்:
நாட்டில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மருத்துவத்திற்காக செலவுகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியமும் அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி கொண்டவர்கள் குறைந்த அளவு இருப்பதும் இந்த பிரீமியத்தொகை அதிகரிப்புக்கு காரணமாகும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனால் நடுத்தர குடும்பங்கள் அதிகரித்து வரும் சிகிச்சை செலவுகளை எதிர்கொள்ள சிரமப்படுகின்றனர். அதனால் வர இருக்கும் பட்ஜெட்டில் சிகிச்சைக்கான நிவாரணம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஆப்டிமா மனேஜர்ஸ் நிறுவனர் கூறியதாவது, மருத்துவச் செலவிற்கு 100% விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் ஹெல்த் பாலிசியின் பிரீமியத்தின் மீதான விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுகான பயிற்சி மையம் – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!
அத்துடன் மருத்துவச் செலவு தற்போது அதிகரித்து வருவதால் கூடுதல் காப்பீட்டுடன் பாலிசி எடுக்க வேண்டும். இதனால் மாதந்தோறும் செலுத்தும் பாலிசிக்கான பிரீமியமும் அதிகரிக்கும். ஆதலால், ஹெல்த் பாலிசியின் பிரீமியத்தின் மீதான விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.