மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – யூனியன் பட்ஜெட்டின் அம்சங்கள்!
மத்திய நிதி அமைச்சர் 2022-23 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
பட்ஜெட் தாக்கல்:
இந்தியாவில் மத்திய மாநில அரசுகள், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டு முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, சம்பள உயர்வு, வீட்டு வாடகைப்படி உயர்வு போன்ற அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 2022ம் ஆண்டு தொடங்கிய நிலையில் 2022 – 23ம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் அரசு ஊழியர்களுக்கும் முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – நேரடி வகுப்புகளுக்கு வரவேற்பு! மாணவர்கள் உற்சாகம்!
அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஓராண்டு அவகாசம் இருந்த நிலையில் 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை 10% லிருந்து 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்கள் அரசு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்! மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும் MS தோனி!
கூட்டுறவு அமைப்புகளுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15% ஆக குறைக்கப்படும். இதனால் அரசின் செலவு ரூ.39.5 லட்சம் கோடி என்றும், வரவு ரூ. 22.8 லட்சம் கோடியாக அதிகரிக்கும். பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் பெறும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஊரக தொழில் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போன்ற திட்டங்களும் பட்ஜெட் தாக்கலில் இடம் பெற்றுள்ளது.