தேர்வில்லாமல் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை – ரூ.65,000/- வரை சம்பளம் !
External Inquiring Authorities பணியிடங்களை நிரப்ப யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் ஆனது 04.04.2022 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- External Inquiring Authorities எனப்படும் வெளி விசாரணை அதிகாரிகள் பதவிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு மிகாதவராக இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் Public Sector Bank களில் Cadre ஆக பணிபுரிந்தவர் அல்லது SMGS-IV பணிக்கு மேல் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் நல்ல உடற்தகுதி கொண்டிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு என தேர்வாகும் தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.65,000/- வரை ஊதியமாக அளிக்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.