தமிழகத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் – மின்துறை அமைச்சர் உறுதி!!
தமிழகத்தில் தொடர்ந்து மின்பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், 10 நாட்களில் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்துள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மின்பராமரிப்பு பணிகள் ஏதும் நடக்காமல் உள்ளது. இதனால், பழுதடைந்த மின் கம்பங்கள், சாய்ந்த மின் கம்பங்கள், மின் கம்ப தாங்கு கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், பலவீனமான பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் மரக்கிளைகள் அகற்றம் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இவற்றை 10 நாட்களுக்கு செய்து முடிக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் கடந்த 19ம் தேதி அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் அறிவிப்பு!
இதனால் தமிழகத்தில் மொத்த மின்வாரியத்தின் இயந்திரங்களும் பகுதியாக பிரிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்பான விவரங்கள் மாவட்ட வாரியாக தயாரிக்கப்பட்டு மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வாரம் முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
பராமரிப்பு பணிகள் நடக்கும் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு மின்தடை செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னர் அறிவித்திருந்தார். தற்போது, 10 நாட்களில் தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் உறுதியளித்துள்ளார். கடந்த 9 மாதங்களாக அதிமுக அரசு எந்த விதமான மின்பராமரிப்பும் செய்யாததே தற்போதைய மின்வெட்டுக்கு காரணம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.