தமிழகம் முழுவதும் இன்னும் 1 வாரத்தில் பள்ளிகள் திறப்பு – சீருடை விற்பனை மும்முரம்!
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி சந்தையில் மாணவர்கள் சீருடை வியாபாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீருடை:
தமிழகத்தில் முதலில் 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பிறகு 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பிறகு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 20ம் தேதியும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். அதே போல 1 – 9 ம் வகுப்புகளுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் தற்போது மாணவர்களுக்கான சீருடை விற்பனை சூடுபிடித்துள்ளது.
மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) – மாதம் ரூ.50,000 வரை பென்சன்! முழு விவரம் இதோ!
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் ஜவுளி சந்தையில் சில்லரை, மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அம் மாவட்டத்தில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே இந்திய அளவில் புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை இயங்கி வருகிறது. அங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளி சந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஜவுளிகளை மொத்த விலையில் கொள்முதல் செய்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் இங்கு சாதாரணமாக 1 கோடி வரையிலும் முக்கிய விசேஷ தினங்களில் 5 கோடி வரையிலும் வியாபாரம் நடைபெறும். இந்த நிலையில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஜவுளி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஜவுளி சந்தையில் இன்று மாணவ மாணவிகளின் சீருடை வியாபாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.