தமிழகத்தில் மின்வாரிய பணியாளர்கள் கவனத்திற்கு – சீருடை விதிகள் கட்டாயம்!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மின்வாரிய பணியாளர்களுக்கு சீருடை விதிகள் குறித்து முக்கிய அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
சீருடை விதிகள்:
தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட் வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல விகிதங்களில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டு நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. மேலும் பலருக்கு மின் கட்டணம் அதிகமாக வருவதாக புகார் எழுந்த நிலையில் மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் சுயமாக மதிப்பிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
TN Job “FB Group” Join Now
பின்னர், மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் விவசாய உற்பத்தியை பெருக்கவும் விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் நடப்பு நிதி ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார். இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என விவசாயிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
எழிலிடம் கேள்வி கேட்ட ஈஸ்வரி, சொல்ல முடியாமல் தவித்த தாத்தா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
இந்நிலையில் தமிழகத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் இன்னும் 60 நாட்களில் செயல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அலுவலகத்துக்கு கேஷுவல் உடை அணிந்து வரக்கூடாது, பெண்கள் சேலை, சல்வார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம். வேட்டி, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடைகளை ஆண்கள் அணியலாம் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் , சீருடை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.