நாடு முழுவதும் வாகனங்களுக்கு ஒரே வடிவ பியுசி சான்று – மத்திய அரசு அறிக்கை!
மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 ன் கீழ் நாடு முழுவதும் பியுசி சான்று ஒரே வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது அதற்கான சான்றிதழின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பியுசி சான்று:
நாடு முழுவதும் தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. மக்கள் பாதுகாப்பு நலன் கருதி போர்க்கால அடிப்படையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாநில வாரியாக அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவை மதிப்பிட்டு வழங்கப்படும் பியுசி சான்று குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருச்சி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 20 முதல் காந்தி மார்க்கெட் திறப்பு!
அதன்படி மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 ன் கீழ் நாடு முழுவதும் ஒரே வடிவத்தில் பியுசி சான்று வழங்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த 14ம் தேதி உத்தரவிட்டது. தற்போது பியுசி சான்றிதலுக்கான முக்கிய அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பியுசி சான்றிதழ் அம்சங்கள்:
- தேசிய பதிவேட்டுடன் பியுசி தரவை இணைப்பதற்காக நாடு முழுவதும் ஒரே வகையில் சான்றிதழின் வடிவமைப்பை அறிமுகப்படுத்துவது.
- முதன் முறையாக நிராகரிப்பு சீட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. சோதனையின் போது சம்பந்தப்பட்ட நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மதிப்பை விட கூடுதலான மதிப்பு இருக்கும் வாகனத்தின் உரிமையாளருக்கு நிராகரிப்பு சீட்டு பொதுவான வடிவமைப்பில் அளிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
- வாகன பழுது பார்க்கும் நிலையங்களில் இந்த ஆவணத்தை காண்பிக்கலாம். மற்றொரு மையத்தில் சோதனை செய்யும் போது, பியுசி சான்றிதழ் மையாக கருவி பழுதடைந்திருந்தால் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
- வாகனம் சம்பந்தமான தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். அதாவது, வாகன உரிமையாளரின் மொபைல் எண், பெயர் மற்றும் முகவரி, இன்ஜின் எண், மற்றும் சேசிஸ் எண் (கடைசி நான்கு எங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும்).
- வாகன உரிமையாளரின் மொபைல் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பு மற்றும் கட்டணம் சம்பந்தமான தகவல்கள் குறுஞ்செய்தி வாயிலாக அந்த எண்ணுக்கு அனுப்பப்படும்.
- வெளியீட்டு தர நிர்ணயங்களுக்கு உட்படாத மோட்டார் வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட பியுசி சோதனை நிலையங்களில் சோதனை செய்வதற்காக வாகனம் பற்றிய தகவல்களை அமலாக்க அதிகாரி எழுத்து பூர்வமாகவோ அல்லது மின்னணு வாயிலாகவோ ஓட்டுநர் அல்லது பொறுப்பாளருக்கு நேரடியாக அனுப்பி வைப்பர்.
- வாகன ஓட்டியோ அல்லது அதன் பொறுப்பாளரோ இதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அல்லது வாகனம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
- வாகன உரிமையாளர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் பியுசி சான்றிதழ் வழங்கப்படும் வரையில் வாகனத்தின் பதிவு சான்றிதழையும், அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிகளையும் பதிவு செய்யும் அதிகாரி நிறுத்தி வைக்க முடியும்.
- தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், மாசு வெளியிடும் வாகனங்களை திறம்பட கண்காணிக்க முடியும்.
- படிவத்தில் க்யூஆர் குறியீடு அச்சிடப்பட்டிருக்கும். பியுசி மையம் குறித்த முழு தகவல்களும் அதில் இடம் பெற்றிருக்கும்.