அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் வேலைக்கு ஆட்கள் தேர்வு – ஆய்வில் தகவல்!
நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் மேன்பவர் குரூப் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என பல நிறுவனங்கள் கூறியுள்ளன.
வேலைக்கு ஆட்சேர்ப்பு:
தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அதிகம் வேலை தேடி திரிகின்றனர். நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் பலர் வேலை இழந்து வேலை தேடியும் அலைவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் இறுதியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் பண்டிகைகள் அதிகமாக வருவதால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும்.
தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – செப்.19 ஆம் தேதிக்கு மாற்றம்!
எனவே இந்த கால கட்டத்தில் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மற்ற காலங்களை காட்டிலும் இந்த பண்டிகை காலங்களில் பல்வேறு நிறுவனங்கள் புதிதாக ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. மேன்பவர் குரூப் சார்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 3000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் 64 சதவிகித நிறுவனங்கள் இந்த ஆண்டின் இறுதியில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக கோரியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் ஊரடங்கு தளர்வு, புதிய வழிகாட்டுதல்கள் – சுகாதாரத்துறை அமைச்சர்!
இந்த ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் சுமார் 20 சதவீத நிறுவனங்கள், சென்ற ஆண்டை விட குறைவான அளவிலேயே வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என கூறியுள்ளனர். 15 சதவீத நிறுவனங்கள் சென்ற ஆண்டு அளவிலேயே பணியமர்த்தல்கள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 40 சதவீத வளர்ச்சி இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளுமாறு கூறப்படுகிறது.